Breaking News

புத்தாண்டு 2014 | 12 கட்டளைகளுடன் ஒரு சிறப்பு பதிவு


புத்தாண்டு வெறும் வார்த்தைகளால் கொண்டாட வெண்டியவை அல்ல; நமது வாழ்க்கையினால் கொண்டாட வேண்டியது இந்தப் புத்தாண்டை அர்த்தமுள்ளதாய், வெற்றிமிக்கதாய் ஆக்க 12 கட்டளைகள் போதுமானதாக இருக்கும் என்ற நம்பிக்கையில் ஒரு சிறப்பு பதிவு 
                   

பத்து நிமிடங்கள் முன்னதாக
உங்களுக்கான நாளை வழக்கமாகத் தொடங்குவதற்குப் பத்து நிமிடங்கள் முன்னதாகத் தொடங்குங்கள்.
பத்து நிமிடங்கள் தாமதமாக
பரவசமோ, பதட்டமோ, உடனே எதிர்வினை ஆற்றாதீர்கள். பத்து நிமிடங்களுக்குப் பிறகு எதிர்வினை ஆற்றுவதை யோசியுங்கள். திட்டுவதாகக் கூட இருக்கலாம். எதையும் பத்து நிமிடங்களுக்குப் பிறகு செய்ய தீர்மானியுங்கள்
பத்து நிமிடங்கள் மௌனமாக
கண்டிப்பாக பத்து நிமிடங்களாவது மௌனத்தில் இருங்கள். அந்த நேரத்தில் அலைபேசியினை அணைத்துவிடுங்கள்.
முதல் முப்பது நிமிடங்கள்
ஒரு நாளின் முதல் முப்பது நிமிடங்களை உங்கள் ஆரோக்கியத்திற்காகப் பயன்படுத்துங்கள். உடற்பயிற்சி, நடைப்பயிற்சி, யோகா என்று உங்கள் வழக்கம் எதுவாக இருந்தாலும் சரி.
உணவிலும் ஓய்விலும் ஒழுங்கு
உணவுப் பழக்கத்திலும் ஓய்விலும் மிதமான, இதமான முறைகளைக் கையாளுங்கள், வயதுக்கேற்ப சாப்பிடுங்கள், வயிற்றின் மீது வன்முறையை செய்யாதீர்கள்.
மனிதர்களை நெருங்குங்கள்:
மனிதர்களை நிறை குறைகளுடன் ஏற்றுக்கொண்டு அவர்களை நேசிக்கத் தொடங்குங்கள். எல்லோரையும் நேசிப்பது அவர்களுக்கு நல்லதோ இல்லையோ, உங்களுக்கு ரொம்ப நல்லது.
அடுத்து என்ன? இதுவே மந்திரம்
வெற்றியோ தோல்வியோ, சாதனையோ சவாலோ, எது நேர்ந்தாலும் அடுத்தது என்ன என்று கேளுங்கள். அப்போதுதான் அடுத்த கட்டம் நோக்கி நகர முடியும். வெற்றியின் மந்திரங்களில் முக்கியமானது.
நம்பிக்கைத் தீர்மானம் நிறைவேற்றுங்கள்
ஒவ்வொருநாள் விடியலிலும் உங்கள் மீது நீங்களே நம்பிக்கைத் தீர்மானம் நிறைவேற்றுங்கள்.
நன்றி அறிவிப்புத் தீர்மானமும் போடுங்கள்
ஒவ்வொரு நாள் இரவும் உறங்கப் போவதற்கு முன்னால், நடந்து முடிந்த வேலைகளுக்காக, கடவுளுக்கும் துணை நின்றவர்களுக்கும் மனசுக்குள்ளேயே நன்றி சொல்லுங்கள்.
கடிகாரத்தை மட்டுமல்ல நேரத்தையும் கையில் கட்டுங்கள்
உங்கள் நேரத்தைக் கொள்ளையடிக்க இடம் கொடுக்காமல் விழிப்புடன் இருங்கள்.
நகைச்சுவை உணர்வை வளர்த்துக் கொள்ளுங்கள் இறுக்கமாய் இருப்பதால் நாம் எதையும் சாதிக்கப் போவதில்லை மன இறுக்கத்தையும் மன அழுத்தத்தையும் வளர்த்துக் கொள்வதைத் தவிர!! வெற்றியாளர்களும் வரலாற்று புருஷர்களும் நகைச்சுவை உணர்வு நிறைந்தவர்களாகவே இருந்திருக்கிறார்கள். நகைச்சுவை உணர்வு, வாழ்வின் பூட்டப்பட்ட பல கதவுகளைத் திறந்துவிடும்.
மனிதத்தன்மையே கடவுள் தன்மையின் ஆரம்பம் மற்றவர்களின் சிரமங்களைப் புரிந்துகொள்வதும், மனித நேயத்துடன் உதவுவதும், மற்றவர்களை மன்னிப்பது முதல் உங்களையும், பிறகு மற்றவர்களையும் முழுமனதோடு மன்னித்து, மலர்ச்சியாய் மகிழ்ச்சியாய் வாழ்க்கை என்கிற கொண்டாட்டத்தில் தீவிரமாகப் பங்கெடுங்கள்.
புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் - பாபு நடேசன் புது தில்லி

No comments