Breaking News

ஒன்றை மட்டும் தெரிந்து கொள்

ஒவ்வொரு மனிதனுக்கும் தனித்தனி குணாதிசயங்கள் இருக்கும். அவர்களுக்கென்று தனித்தனி ஆசாபாசங்கள் இருக்கும். அதன் வழியில் தான் அவர்களின் பயணமும் இருக்கும்.
அவர்களை ஒழுங்கு படுத்துகிறேன் என்று வேதனைகளை சுமந்து கொள்ளாதே. அவர்கள் போகும் வரை போகட்டும். போய் ஒரு அனுபவத்தை பெற்றபின் திரும்பி வருவார்கள்.

அதுவரை நீ பொறுமையாக இரு,

அவர்கள் போன பாதை நல்லதா? கெட்டதா? என்பதை அவர்களாக உணர்ந்தால்தான் அவர்களுக்கு ஒரு உண்மை தெரியும். அந்த உண்மையை நீ முன்கூட்டியே சொன்னால் உன்னை அவர்களுக்கு பிடிக்காது.

இதுதான் வாழ்க்கையின் உண்மை...

அது உடன் பிறந்தவர்களாக இருந்தாலும், சரி, எந்த உறவுகளாக இருந்தாலும் சரி...

ஒருவரின் குணங்களும் செயல்களும் பூர்வ புண்ணியத்தின் அடிப்படையில் தான் இருக்கும். அது அவர்கள் பெற்றோர்கள் வளர்ப்பதில் உள்ளது, சிலர் அதையும் பொருட்படுத்தாது தான் தோன்றி தனமாக இருப்பார்கள், இவர்களை நீ திருத்த முடியாது, அனுபவம் திருத்தும்.

இதை நீ மாற்றி அமைக்க முடியுமா?..
ஒதுங்கி நின்று வேடிக்கை பார்!....

பந்த பாசத்தில் உள்ளே விழுந்து அறிவுரை சொல்லுகிறேன் என்று 
கெட்ட பெயரை சம்பாதித்துக் கொண்டிருக்காதே...
அவர்களுக்கு அனுபவம் தான் குரு.
அந்த அனுபவம் ஏற்பட்ட பிறகு தன்னை மாற்றிக் கொள்வதற்கு அவர்களுக்கு விதி இருந்தால் தன்னை திருத்திக் கொள்ளட்டும். அதுவரை நீ பொறுமையாக இரு..

எதையும் ஏற்றுக்கொள்ளும் பக்குவத்தோடு இருந்து கொள்ள பழகிக் கொள்.
எல்லையில்லாத அன்பை வைத்திருந்தேன் என்னை ஏமாற்றி விட்டார்கள் என்று புலம்பிக் கொண்டு இருக்காதே. 

நீ உன்னை எப்படி வைத்துக் கொள்ள வேண்டும் என்று நினைக்கிறாயோ அப்படி வைத்துக்கொண்டு வாழப் பழகிக் கொள்.

எப்படி இருந்தாலும் நீதான் அந்த சுமையை சுமந்து ஆகவேண்டும். அழுது சுமப்பதை காட்டிலும். ஏற்று சுமப்பது உனக்கு சிரமம் இல்லாமல் இருக்கும்.
தைரியமும் தன்னம்பிக்கையும் தான்
ஒரு மனிதனை உலகத்தில் வாழ வைக்கும் என்ற உண்மையை உணர்ந்துகொள்.

கடந்து செல் கவலைகளை மட்டுமல்ல. நம்மை கடந்து சென்ற மனிதர்களையும்...

உன் கனவுகள் பெரிதாக இருக்கட்டும்... உன் கவலைகள் சிறியதாக இருக்கட்டும்... 
நம்மை மதிப்பவர்களை தேடிப்போகனும் மதிக்காதவர்களை திரும்பிக்கூட பார்க்ககூடாது...
இந்த பக்குவத்தை அடைந்துவிட்டால் எத்துன்பமும் உன்னை நெருங்காது என்பதை உணர்ந்துகொள்.

உனக்கு தெரிந்த வரை நீ அறிந்த வரை
யாருக்கும் எந்த உயிருக்கும், எந்த வகையிலும் நன்மை மட்டுமே செய்...

அன்போடு
பாபு நடேசன் ✍️



1 comment: