உயரும் எண்ணம் உனக்கிருந்தால் | பாபு நடேசன்
உயரும் எண்ணம் உனக்கிருந்தால்
நல்லதையே நினை.
ஒரே சிந்தனை உயர்ந்த சிந்தனை எனில்
வானத்தின் உச்சிக்கேன் நமைக் கொண்டு செல்லும்!
உங்கள் தவறை நியாப்படுத்தும் உறவை விடவும்
சுட்டிக்காட்டி திருத்தும் உறவு தான் சிறந்த உறவு!
அது உங்கள் வாழ்க்கை உயர ஒரு உந்துகோல்!
சிலருக்கு புரியவைக்கும் முயற்சியின் பெரும் தோல்விகளே
நம் வெறுப்புக்கு காரணம் ஆகின்றன
எண்ணங்களை மாற்றிக் கொள்ள முடியாதவர்களால் வேறு எதையும்
மாற்ற முடியாது!
நேற்றும் இன்றும் ஒன்றல்ல;
மாற்றங்கள் காலத்தின் கட்டாயம்
உன்னைப் புரிந்து கொள்
உன்னை உனக்கே தெரியவில்லை எனில்
யாரைநீ புரிந்து கொள்வாய்?
கலகம் கத்தியை போன்றது
குத்தும் போது சுகமாகத்தான் இருக்கும்
ஆனால் தன்னை குத்தும் போதுதான் கொடூரமாக வலிக்கும்!
ஒருவரை ஒருவர் அடக்க நினைப்பதும் , மாற்ற நினைப்பதும் புரியாத வாழ்வியல்
கிடைத்த வாழ்வுக்கு நன்றி சொல்லி உன் சார்ந்தோர் பெயர் கெடாமல் பார்த்துக்கொள்வது நலம்.
இன்னாரை போல் வாழ வேண்டும் என்று நாம் நினைப்பதை விட
நீ நீயாக வாழ்ந்து பார்....!
தவறுவது மனித இயல்பு.
தவறு செய்ததால் தான் நாகரீகமே வளர்ந்தது,
புகுந்தகத்தில் யாரும் பூதம் இல்லை,
புரிதலுக்கும் வெறுப்புக்கும் இடையில் ஒரு சிறிய கோடு தான் கோபம்.
நமக்கு நல்லது செய்தால் கூட தவறாக தான் தெரியும்
உன் வீடு போல் அன்பாலும், பாசத்தாலும் கட்டப்பட்ட கோவில் தான் புகுந்தகமும்...
பணம் பெரிதல்ல மனிதனே மாண்பு
மிக்கவன்,
மிக்கவன்,
மூத்தோரை மதித்து இன்முகம் காட்டி முன்னேறி செல்
உன் குடும்பம் உன் கையில்,
சண்டை நல்லது நான்கு சுவற்றுக்குள்
உங்களோடு
பாபு நடேசன்
No comments